கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

முதல்வர், அமைச்சர் குறித்து அவதூறு: அமமுக நிர்வாகி கைது

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு பரப்பியதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக

News image
Updated On :14 மே 2018, 8:20 pm

DIN

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு பரப்பியதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள தேவம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் திருச்செங்கோடு ஒன்றியச் செயலராக உள்ளார். 
இவர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வந்துள்ளார். இதுகுறித்து கலியனூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலர் குமரேசன் அளித்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தினேஷை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.