பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
பெட்ரோல் -டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிகப் பெரிய தாக்குதலாகும். விலைவாசி உயர்வு அனைத்துக்கும் பெட்ரோல் -டீசல் விலை உயர்வே காரணம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை காரணம் காட்டும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரின் விளக்கம் கண்டனத்துக்குரியது.
தெற்காசியாவிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் -டீசல் மீது அதிக அளவு வரிகள் விதிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. பெட்ரோல் -டீசலின் மூலம் வரி வருவாயைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டும் மத்திய -மாநில அரசுகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டு வரிகளை உடனடியாகக் குறைத்து மக்களைக் காக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக வளா்ச்சிக்கு மறைமுகமாக உதவும் விஜய்: தொல். திருமாவளவன்
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்

நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரிப்பு

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


