ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: டிடிவி தினகரன் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 மே 2018, 9:20 pm

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
பெட்ரோல் -டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிகப் பெரிய தாக்குதலாகும். விலைவாசி உயர்வு அனைத்துக்கும் பெட்ரோல் -டீசல் விலை உயர்வே காரணம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை காரணம் காட்டும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரின் விளக்கம் கண்டனத்துக்குரியது.
தெற்காசியாவிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் -டீசல் மீது அதிக அளவு வரிகள் விதிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. பெட்ரோல் -டீசலின் மூலம் வரி வருவாயைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டும் மத்திய -மாநில அரசுகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டு வரிகளை உடனடியாகக் குறைத்து மக்களைக் காக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.