குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீரைக் கேட்டுப் பெற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக போதிய தண்ணீர் காவிரியில் வராததால், குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. இதே ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளும் பல நேரங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்டு மிகுந்த நஷ்டத்துக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். இந்தச் சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த ஆணையம் அமலுக்கு வரும்.
தற்போதுள்ள நிலையில் நாடாளுமன்றம் எப்போது கூடும் என்பதும், அப்படியே கூடினாலும் மத்திய அரசு இந்த ஆணையத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்மொழியுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்படும்.
எனவே, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன், தேவைப்பட்டால் இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தின் டீசர்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

