தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 4 ஆவது அலகில் திங்கள்கிழமை திடீரென கொதிகலன் பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன்மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக முழு மின் உற்பத்தியை எட்ட முடியாத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், 4}ஆவது அலகில் உள்ள கொதிகலனில் திங்கள்கிழமை திடீரென பழுது ஏற்பட்டதால் அந்த அலகின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதனால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு அலகுகளிலும் வழக்கம்போல தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
கடந்த 19}ஆம் தேதி 3}ஆவது அலகில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் முகவராக யாருக்கு தடை?

அறிமுக சீசனிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹைதராபாத்..! ஆனந்தக் கண்ணீரில் லபுஷேன்!
கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றாத விசிகவினர்: தொல் திருமாவளவன்

மே நாள் விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

