புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: டிடிவி தினகரன் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 மே 2018, 9:20 pm

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
பெட்ரோல் -டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிகப் பெரிய தாக்குதலாகும். விலைவாசி உயர்வு அனைத்துக்கும் பெட்ரோல் -டீசல் விலை உயர்வே காரணம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை காரணம் காட்டும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரின் விளக்கம் கண்டனத்துக்குரியது.
தெற்காசியாவிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் -டீசல் மீது அதிக அளவு வரிகள் விதிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. பெட்ரோல் -டீசலின் மூலம் வரி வருவாயைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டும் மத்திய -மாநில அரசுகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டு வரிகளை உடனடியாகக் குறைத்து மக்களைக் காக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.