பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
பெட்ரோல் -டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிகப் பெரிய தாக்குதலாகும். விலைவாசி உயர்வு அனைத்துக்கும் பெட்ரோல் -டீசல் விலை உயர்வே காரணம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை காரணம் காட்டும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரின் விளக்கம் கண்டனத்துக்குரியது.
தெற்காசியாவிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் -டீசல் மீது அதிக அளவு வரிகள் விதிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. பெட்ரோல் -டீசலின் மூலம் வரி வருவாயைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டும் மத்திய -மாநில அரசுகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டு வரிகளை உடனடியாகக் குறைத்து மக்களைக் காக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி

ரியான் பராக், டோனோவன் ஃபெரைரா அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 226 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


