தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-ஆவது நாள் போராட்டம் வன்முறை மற்றும் காவல் துறையினர் தூப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் தற்போது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலையால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
பேருந்து சேவை நிறுத்தத்தை தொடர்ந்து, 144 தடை உத்தரவு நீட்டிப்பு, இணையதள சேவை முடக்கம் என அடுத்தடுத்த நடவடிக்கையால் தூத்துக்குடி மாவட்டமே முற்றிலும் ஸ்தம்பித்து போனது.
இதையடுத்து, காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து எதிர்கட்சியினர் இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தன.
இந்நிலையில், 3 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. அதுவும் காவல் துறையினரின் பாதுகாப்புடனே இயக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படிப்படியாக இந்த பேருந்து சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


