சென்னை கட்டுமான விபத்தில் 4 பேர் சாவு
சென்னை சேத்துப்பட்டில் ஏற்பட்ட கட்டுமான விபத்தில் புதன்கிழமை 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்பர் டேங்க் சாலையில் அமைந்திருக்கும் வேணுகோபால் அவென்யூவில் புதிய உணவக கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக கீழ்பாக்கம் துணை ஆணையர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து தீயணைப்புத்துறை உடனடியாக வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

