

சென்னையில் சென்ட்ரல் - நேரு பூங்கா, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., மற்றும் சின்ன மலை இடையே புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து மே 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
பொதுமக்கள் இப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதை அறிந்து கொள்வதற்காக இந்த புதிய வழித்தடங்களில் இலவச பயணத்தை அறிமுகம் செய்தது. மே 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை இந்த இலவச பயணம் தொடர்ந்தது.
இதில் மொத்தம் 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலவச பயணம் தொடங்கிய மே 25-ஆம் தேதி 50 ஆயிரம் பேர், மே 26-ஆம் தேதி 20 ஆயிரத்து 500 பேர், மே 27-ஆம் தேதி அதிகபட்சமாக 1 லட்சத்து 84 ஆயிரத்து 518 பேர், மே 28-ஆம் தேதி 1 லட்சத்து 12 ஆயிரத்து 520 பேர், கடைசி நாளான மே 29-ஆம் தேதி 1 லட்சத்து 73 ஆயிரத்து 986 பேர் பயணம் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.