பாஜக ஆட்சியில் படித்த இளைஞர்களை முதலாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
பாஜக ஆட்சியில் படித்த இளைஞர்களை முதலாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். தொழிற்சாலைகளை அமைப்பதற்கு ரூ.1 கோடி வரை ஒரு மணி நேரத்தில் கடன் அளிக்கும் மிகப்பெரிய திட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார்.
ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பாஜக கூறியது. அந்தப் பணம் எங்கே? என காங்கிரஸார் கேட்கின்றனர். அவர்கள் முதலில் ஒழுங்காகக் கணக்கு கொடுக்கவில்லை. பிரதமர் மோடி கூறியது போன்று, ராகுல் காந்தியோ, ப.சிதம்பரமோ, லாலுபிரசாத் யாதவோ மக்களைக் காப்பற்றுவதற்காக கூட்டணி அமைக்கவில்லை. தம் மக்களைக் காப்பதற்காகத்தான் கூட்டணி அமைத்துள்ளனர்.
ஏற்கெனவே பல நல்ல திட்டங்கள் அடிதட்டு மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி பரிசாகக்கூட பல நல்ல திட்டங்களை மோடி அறிவிக்க உள்ளார். பாஜகவின் ஆட்சி சாதாரண மக்களுக்கானது. பெரிய முதலாளிகளுக்காக இந்த ஆட்சி நடைபெறவில்லை என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
பேச்சில்லாமல் செய்யும் சில தருணங்கள்... முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சினேகா!

போலி கையொப்ப விவகாரம்: மமதா வீட்டில் சோதனை!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


