புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்மாமணி பாவலர் மணி சித்தன் (எ) ராதாகிருஷ்ணன் (98) ஞாயிற்றுக்கிழமை (நவ.4) காலமானார்.
புதுச்சேரி புஸ்ஸி வீதி-மிஷன் வீதி சந்திப்பில் வசித்து வந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பாவேந்தர் பாரதிதாசனின் சீடரான இவர், அவரது குயில் பத்திரிகையில் முக்கியப் பங்காற்றினார்.
தொடக்க காலத்தில் பல் மருத்துவராகப் பணியாற்றிய ராதாகிருஷ்ணன், பின்னர் இலக்கியப் பணியில் ஈடுபட்டார். நாலாயிர திவ்விய பிரபந்தத்தை நன்கு அறிந்தவர். 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஜீயர் சுவாமிகளால் வைணவ செம்மல் என்ற பட்டம் பெற்றார்.
புதுச்சேரியில் நடைபெறும் கம்பன் விழாவில் இவரது அறக்கட்டளை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெறும். இவரது உடல் புதுச்சேரியில் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
தொடர்புக்கு....98425 34057
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



