கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

குழந்தைகள் பட்டாசு வெடித்தால் தந்தை மீது வழக்கு

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, குழந்தைகள் பட்டாசு வெடித்தால் அவர்களின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று திருவண்ணாமலை மாவட்டக் காவல்

Updated On :6 நவம்பர் 2018, 1:15 am IST


உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, குழந்தைகள் பட்டாசு வெடித்தால் அவர்களின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளிப் பண்டிகைக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
இதை மீறி பட்டாசுகள் வெடிப்பதைத் தடுக்க காவல் துறை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடும். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி குழந்தைகள் பட்டாசுகளை வெடித்தால் அந்தக் குழந்தையின் தந்தை மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நீதிமன்ற உத்தரவைக் கடைப்பிடித்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.