உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, குழந்தைகள் பட்டாசு வெடித்தால் அவர்களின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளிப் பண்டிகைக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
இதை மீறி பட்டாசுகள் வெடிப்பதைத் தடுக்க காவல் துறை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடும். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி குழந்தைகள் பட்டாசுகளை வெடித்தால் அந்தக் குழந்தையின் தந்தை மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நீதிமன்ற உத்தரவைக் கடைப்பிடித்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 3 இளைஞர்கள் காயம்
அண்ணா பிறந்த நாளில் அண்ணாமலை கட்சி தொடங்குகிறாரா?

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


