எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரையைத் தொட்டது கஜா புயலின் வெளிப்பகுதி: வானிலை ஆய்வு மையம்

கஜா புயலின் வெளிப்பகுதி மற்றும் மையப்பகுதி ஆகியவை கரையைத் தொட்டு விட்டது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :15 நவம்பர் 2018, 1:49 pm

DIN

சென்னை: கஜா புயலின் வெளிப்பகுதி மற்றும் மையப்பகுதி ஆகியவை கரையைத் தொட்டு விட்டது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கஜா புயலானது இன்று இரவு நாகை மற்றும் வேதாரண்யம் இடையே இரவு 8 முதல் 11 மணிக்குள் கரையைக் கடக்க உள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கஜா புயலின் வெளிப்பகுதி மற்றும் மையப்பகுதி ஆகியவை கரையைத் தொட்டு விட்டது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

கஜா புயலானது தற்போது நாகப்பட்டிணத்திலிருந்து கிழக்குத் திசையில் 138 கிமீ  தொலைவில் நிலை கொண்டுள்ளது தற்போது மணிக்கு 10 கிமீ வேகத்தில் புயலானாது நகர்ந்து வருகிறது. 

தற்போது புயலின் புயலின் வெளிப்பகுதி மற்றும் மையப்பகுதி ஆகியவை கரையை தொட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 20 கிமீ நீளமுள்ள புயலின் கண் பகுதி மற்றும் பின் பகுதி ஆகியவையும் கரையைக் கடக்கும். 

அப்போது காற்றின் வேகமானது மிகவும் அதிகமாக இருக்கும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.