கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைக்க முதற்கட்ட பணிகள் துவக்கம்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 'லோக் ஆயுக்த' அமைப்பினை உருவாக்க முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :29 நவம்பர் 2018, 8:44 am

DIN

சென்னை: தமிழகத்தில் 'லோக் ஆயுக்த' அமைப்பினை உருவாக்க முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

அனைத்து மாநிலங்களிலும் அரசுத் துறைகளில் நடைபெறும் ஊழல்களை சுதந்திரமாகக் கண்டறிந்து விசாரிக்க, கடந்த 2013-ம் ஆண்டு, ‘லோக் ஆயுக்தா’ மற்றும் ‘லோக்பால்’ சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக எந்த ஒரு தனி மனிதனும் வெளிப்படையாக வழக்குத் தொடர முடியும் என்று கூறப்பட்டது.   

அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதியன்று 'லோக் ஆயுக்த' அமைப்பினை தமிழகத்தில் உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 'லோக் ஆயுக்த' அமைப்பினை உருவாக்க முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக வியாழனன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

முதல்கட்ட பணிகளுக்கு என 28 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கான ஆணையும் இந்த அரசாணையுடன் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.