நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குட்கா ஊழல் புகாரில் சென்னையில் மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை 

குட்கா ஊழல் புகாரில் சென்னையில் மத்திய அரசு அதிகாரிகள் இருவர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 

News image
Updated On :4 அக்டோபர் 2018, 11:47 am

DIN

சென்னை: குட்கா ஊழல் புகாரில் சென்னையில் மத்திய அரசு அதிகாரிகள் இருவர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 

தமிழகத்தை உலுக்கி வரும் குட்கா ஊழல் தொடர்பாக கோடவுன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகிய 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் குட்கா ஊழல் புகாரில் சென்னையில் மத்திய அரசு அதிகாரிகள் இருவர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 

மத்திய வருவாய்த் துறையில் பணியாற்றி வரும்  செந்தில் வளவன் மற்றும் கலால்துறை அதிகாரியான ஸ்ரீதர் ஆகிய இருவர் வீடுகளிலும்தான் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது     

தில்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையை முன்னின்று நடத்தி வருகின்றனர். சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகிவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.