இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது: டிடிவி தினகரன்

இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 அக்டோபர் 2018, 11:26 am IST

இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
திருப்பரங்குன்றத்தில் மழைக்காலத்தில் ஏற்கெனவே இடைத்தேர்தல் நடந்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது. வானிலை மையம் அரசியல் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. 

திடீர் என்று ரெட் அலர்ட் விட்டார்கள். நேற்று சென்னையில் மழையே இல்லை. இடைத்தேர்தல் நடந்தால் அதிமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று தலைமைச் செயலர் மூலம் கடிதம் எழுதியுள்ளனர். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை சந்திக்க திமுக பயப்படுகிறது. தற்போதைய அரசு, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை எனவும் விமர்சித்தார். 

நாட்டில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா, இல்லை அதிபர் ஆட்சி நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை. கல்வித்துறையில் நிறைய புகார் வருவதாக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தெரிவித்தார். சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 59 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. அதுவே அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்தால் குண்டாஸே போடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.