மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே இரட்டைக் கொலை: பழிக்குப் பழியா?  

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய் மாலை நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

News image
Updated On :16 அக்டோபர் 2018, 1:05 pm

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய் மாலை நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவையில் கடந்த மே மாதம் 20-ம் தேதி, விஜய், பூமிநாதன் ஆகிய இருவரை மர்மக் கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் 20 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் 12 பேர், ஏற்கெனவே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் வாலாந்தரவை அருகே உள்ள ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வாசு (36),  ரெவின்யூவலசை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்காமாட்சி மகன் பிரசாந்த் (26) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய ராமநாதபுரம் எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா அளித்த பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் உத்தரவிட்டார். அதன்படி, அதற்கான உத்தரவு நகல், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

வாலாந்தரவை இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய் மாலை நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே  வைத்து கார்த்திக் மற்றும் விக்கி ஆகிய இரு இளைஞர்களை மர்ம கும்பல் ஒன்று செவ்வாய் மாலை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்று விட்டது. 

இது வாலாந்தரவை இரட்டைக் கொலை சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக நடந்தது என்று சந்தேகிக்கப்படுவதால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.