சுருளி அருவியில் வெள்ளம் குறைந்ததால் திங்கள்கிழமை சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குளிக்க சரணாலயத்தினர் அனுமதித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த அக்.19-ஆம் தேதி பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதைக் கண்காணித்த மேகமலை வன சரணாலயத்தினர் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை குளிக்க அனுமதிக்கவில்லை.
இதனால் அருவிக்கு வந்த பக்தர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து படிப்படியாக மழை குறைந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். சுருளி அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் நெருக்கடி இல்லாமல் மகிழ்ச்சியுடன் அருவியில் குளித்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


