சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
சென்னை முழுவதும் பணி நிமித்தமாக நாள்தோறும் பலர் வருகை தருகின்றனர். குறிப்பாக பேச்சுலர்களின் வரவு அதிகளவில் உள்ளது. இதனால் மாநகரம் மட்டுமல்லாமல் சுற்றுப்பறப் பகுதிகளிலும் அதிகளவிலான குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பேச்சுலர்கள் தங்குவதற்கு வசதியாக விடுதிகள் பல அமைந்துள்ளன. இவற்றில் ஆண்கள், பெண்கள் என இருவரும் தங்கும் விதமாக பிரத்தியேக விடுதிகள் செயல்படுகின்றன. இதனிடையே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டார். பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யாத மகளிர் தனியார் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


