பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா, உயர் நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையையும் விமர்சித்ததாகக் கூறி திருமயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து, அக்டோபர் 22-ஆம் தேதி அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.எஸ்.தினகரன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
ராஜ்காட் - சாந்தி வன் பகுதியை அழகுப்படுத்தும் திட்டத்துக்கு தில்லி அரசு ஒப்புதல்!

மானுடம் தோற்குதம்மா...

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

