கோபி: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு திருமணம் நிச்சயமான நிலையில் மணப்பெண் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு வயது 43. இவருக்கும், கோபி பகுதியைச் சேர்ந்த சந்தியா (23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் 12ம் தேதி பண்ணாரி அம்மன் கோயிலில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், குடும்பத்தினர் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்குக் கொடுத்து வந்தனர். திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில், திடீரென சந்தியா வீட்டில் இருந்து மாயமானார்.
கடந்த 2 நாட்களாக அவரை உறவினர் வீடுகளில் தேடி வந்த சந்தியாவின் தாயார், கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அக்கா வீட்டுக்குப் போகிறேன் என்று கூறி சென்ற சந்தியா 2 நாட்களாக எங்குச் சென்றார் என்று தெரியாததால், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு புகாரில் கூறியுள்ளார்.
சந்தியாவுக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், அவருடன் சந்தியா சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்தும் தாயார் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

வாக்குப்பதிவு நாளில் மழைக்கு வாய்ப்பு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!

தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


