“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அதிமுக எம்எல்ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் காணாமல் போனதால் குடும்பத்தினர் அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு திருமணம் நிச்சயமான நிலையில் மணப்பெண் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 7:11 am


கோபி: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு திருமணம் நிச்சயமான நிலையில் மணப்பெண் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு வயது 43. இவருக்கும், கோபி பகுதியைச் சேர்ந்த சந்தியா (23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

செப்டம்பர் 12ம் தேதி பண்ணாரி அம்மன் கோயிலில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், குடும்பத்தினர் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்குக் கொடுத்து வந்தனர். திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில், திடீரென சந்தியா வீட்டில் இருந்து மாயமானார்.

கடந்த 2 நாட்களாக அவரை உறவினர் வீடுகளில் தேடி வந்த சந்தியாவின் தாயார், கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அக்கா வீட்டுக்குப் போகிறேன் என்று கூறி சென்ற சந்தியா 2 நாட்களாக எங்குச் சென்றார் என்று தெரியாததால், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு புகாரில் கூறியுள்ளார்.

சந்தியாவுக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், அவருடன் சந்தியா சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்தும் தாயார் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.