மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன

தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 8:08 pm


தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 
சென்னையிலிருந்து திங்கள்கிழமை விமானம் மூலம் மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 
இது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றது. 
அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்குச் சென்றடைகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எளிமையானவராக யாரும் சந்திக்ககூடியவராக உள்ளார். 
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை. திருப்பரங்குன்றத்தில் அதிமுகவே வெற்றிபெறும்.
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு பல பகுதிகளுக்கு சென்றடைகிறது. ஒருசில இடங்களில் போதிய மழை இல்லாததாலும், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டதாலும் அங்கு தண்ணீர் செல்ல தாமதமாகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.