புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன

தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 8:08 pm


தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 
சென்னையிலிருந்து திங்கள்கிழமை விமானம் மூலம் மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 
இது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றது. 
அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்குச் சென்றடைகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எளிமையானவராக யாரும் சந்திக்ககூடியவராக உள்ளார். 
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை. திருப்பரங்குன்றத்தில் அதிமுகவே வெற்றிபெறும்.
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு பல பகுதிகளுக்கு சென்றடைகிறது. ஒருசில இடங்களில் போதிய மழை இல்லாததாலும், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டதாலும் அங்கு தண்ணீர் செல்ல தாமதமாகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.