புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மேட்டூர் உபரிநீரை சேலம் மாவட்ட நீர்நிலைகளுக்கு திருப்பி விட வேண்டும்: ஜி.கே.மணி

மேட்டூர் உபரிநீரை சேலம் மாவட்ட நீர்நிலைகளுக்கு திருப்பி விட வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

News image

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 9:14 pm


மேட்டூர் உபரிநீரை சேலம் மாவட்ட நீர்நிலைகளுக்கு திருப்பி விட வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு பேசியது: கர்நாடகம், கேரளத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.47 டி.எம்.சி.யை எட்டியது. ஆனால், மேட்டூர் அணையிலிருந்து 170 டி.எம்.சி. உபரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளது. 
மேட்டூர் அணை கட்டும்போது 11 லட்சம் ஹெக்டேராக இருந்த கர்நாடகத்தின் பாசனப் பரப்பு தற்போது 25 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தின் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு பாசனப் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீர் மேலாண்மை திட்டத்தில் போதிய கவனம் செலுத்தாததால், தமிழகத்தின் பாசனப் பரப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. காமராஜர் ஆட்சியில் தமிழகத்தில் 9 அணைகள் கட்டப்பட்டன. ஆனால், அதன் பிறகு அணைகள் கட்டப்படவில்லை. மேட்டூர் அணை அமைந்துள்ள சேலம் மாவட்டத்துக்கு அணையால் எந்தவித பலனும் இல்லை. எனவே, மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில், மேட்டூர் உபரிநீரை சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 976 நீர் நிலைகளுக்கு உபரி நீரை திருப்பிவிட வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாசன வசதி பெற முடியும்.
மேட்டூர் அணைநீர் கடைமடை வரை சென்றடையவில்லை. இதையொட்டி டெல்டா பாசன மாவட்டங்களில் பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழத்தில் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் உணவு, உற்பத்தி பெருகும். மேலும், மேட்டூர் நீரை தருமபுரி மாவட்டத்தில் தென்பெண்ணையாறு, பாலாறு நதிகளுடன் இணைக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.