சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த தமிழிசை சௌந்தரராஜனிடம் பாஜகவை விமரிசித்து கருத்து தெரிவித்த பெண்ணை கைது செய்ததற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு திங்கள்கிழமை விமானத்தில் பயணித்தார். அப்போது, அதே விமானத்தில் பயணம் செய்த சக பயணியான ஒரு பெண், தமிழிசையை நோக்கி பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று விமரிசித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்மனியை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளதாவது,
"ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!
அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்!
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதீத பேட்டரி திறனுடன் வெளியான ஓப்போ எஃப்33, எஃப்33 ப்ரோ!

ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சு! சௌதி, கத்தார், துருக்கி செல்கிறார் பாக். பிரதமர்!

ரூ. 8,000 கூப்பன் மாதிரிகளை வழங்கினால் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

நூர் அகமதுடன் நீண்ட நேரம் உரையாடிய தோனி..! ரகசியம் பகிர்ந்த பயிற்சியாளர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


