மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழிசையிடம் பாஜகவை விமரிசித்த சக விமானப் பயணி கைது - ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த தமிழிசை சௌந்தரராஜனிடம் பாஜகவை விமரிசித்து கருத்து தெரிவித்த பெண்ணை கைது செய்ததற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 4:59 pm

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த தமிழிசை சௌந்தரராஜனிடம் பாஜகவை விமரிசித்து கருத்து தெரிவித்த பெண்ணை கைது செய்ததற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு திங்கள்கிழமை விமானத்தில் பயணித்தார். அப்போது, அதே விமானத்தில் பயணம் செய்த சக பயணியான ஒரு பெண், தமிழிசையை நோக்கி பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று விமரிசித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்மனியை போலீஸார் கைது செய்தனர். 

இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளதாவது, 

"ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!

அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?

நானும் சொல்கின்றேன்!

“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.