92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சென்னையில் பரவலாக மழை

சென்னையில் பரவலாக செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.

News image
Updated On :20 நவம்பர் 2018, 9:38 pm

DIN

சென்னையில் பரவலாக செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. 
வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினம்வேதாரண்யம் இடையே கடந்த 16ஆம் தேதி அதிகாலையில் கரையைக் கடந்தது. இந்தப் புயலால் சென்னைக்கு மழை கிடைக்கவில்லை. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, வேளச்சேரி, தரமணி, நங்கநல்லூர், எழும்பூர், தாம்பரம் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மழை காரணமாக, பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. 
இதுதவிர, பல இடங்களில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சென்னையில் இரவு 8.30 மணி நிலவரப்படி, மீனம்பாக்கத்தில் 27.5 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 5.4 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.