மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து ஆங்காங்கே வாகனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோவை புளியகுளத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனம் முழுவதும் 146 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் உரிய ஆவணங்கள் இன்றி அந்த தங்கம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

எனவே 146 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் அந்த வாகனம் ஆகிவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மும்பையில் இருந்து கோவையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு இந்த தங்கக் கட்டிகளை எடுத்துச் செல்வதாக அந்த வாகன ஓட்டுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் நடைபெறும் சோதனைகளில் தற்போது வரை தமிழகத்தில் இருந்து தான் அதிகளவிலான நகை, பணம் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புளியங்குடி அருகே நாய் கடித்து 13 போ் காயம்

ஷக்குா் பஸ்தியில் தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்

கண்டுபிடி கண்ணே!

தெரியுமா?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


