இச்சம்பவத்தன்று மாலை 5 மணி வாக்கில் சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் கொடுத்துள்ளனர். அப்போதே உடனடியாக காவல்துறை செயலில் இறங்கியிருந்தால் சிறுமியை மீட்டிருக்க முடியும். ஆனால் காவல்துறை காலம் கடத்தியதன் விளைவாக, அச்சிறுமி அன்றிரவு முழுவதும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் ரோட்டில் வீசப்பட்டுள்ளார். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, துடியலூரில் சிறுமி கொலை சம்பவம் போன்று அடுக்கடுக்கான சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் காவல்துறை துடிப்புடன் செயல்பட மறுத்து வருவது ஆழ்ந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது,