சேலம்: சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து தமிழக அரசு பிறப்பித்த அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேலும், எட்டு வழிச் சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்தியதும் செல்லாது என்று தீர்ப்பளித்து, நிலம் கையகப்படுத்த 2018ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
சேலம் பசுமை வழித் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த விவசாயிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை ஏராளமான கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள்.