தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 100 கோடி அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை 

சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ. 100 கோடி அபராதம் விதித்து  பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 100 கோடி அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை 
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ. 100 கோடி அபராதம் விதித்து  பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னையில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டதாகவும், அதை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதுபற்றிய விசாரணையின் முடிவில் 19 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வெளியிட்டது. அதில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தொடர்ந்து மாசடைந்து, தற்போது சாக்கடையாகவே மாறிவிட்டன. மாநில அரசின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுகிறது என்று குறிப்பிட்டு இருந்தது .

அத்துடன் இந்த விவகாரத்தில் மாநில அரசின் தோல்வியை கணக்கிலெடுத்துக் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த தொகையை, சுற்றுச்சூழலை மேம்படுத்த பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. .

இருப்பினும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, ஒரு நிபுணர் குழுவை அமைக்கிறோம். இக்குழு, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவை மதிப்பிடுவதுடன், சுற்றுச்சூழலை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும். இக்குழு 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

உரிய காலத்துக்குள் சீரமைப்பு பணிகளை முடிப்பதாக தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையுடன் தமிழக அரசின் தலைமை செயலாளர், ஏப்ரல் 23ந்தேதி, தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக பொதுப்பணித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.  அந்த மனு மீது செவ்வாயன்று நடந்த விசாரணையில், தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்திற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com