வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டம்: திமுக 'பகீர்' புகார் 

மதியம் மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் ஆணையத்தில்  திமுக புகார் அளித்துள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2019, 3:39 pm IST

சென்னை: மதியம் மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் ஆணையத்தில்  திமுக புகார் அளித்துள்ளது.

தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழன் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.49% வாக்குகள் பதிவாகியுள்ளது

இந்நிலையில் மதியம் மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் ஆணையத்தில்  திமுக புகார் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன் நேரிடையாக அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:

வியாழன் மதியம் மூன்று மணிக்கு மேல் குறிப்பிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது. 

அதற்கு ஏற்ற வகையில் அங்கு செயல்பட்டு வரும் சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்யய அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல் குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பை குறைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  

எனவே தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தமிழகத்தில் தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.