குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திமுக - பாமக இடையே நடைபெற்ற தேர்தல் தொடர்பான மோதலில், மூவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழன் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 3 மணி நிலவரப்படி 52.02% வாக்குகள் பதிவாகியுள்ளது
காலை வரை பெரும்பாலும் அமைதியாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவில், மதியத்திற்கு மேல் கொஞ்சம் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறத் துவங்கியுள்ளது.
முன்னதாக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் தொடர்பாக பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திமுக - பாமக இடையே நடைபெற்ற தேர்தல் தொடர்பான மோதலில், மூவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள கல்லூர் என்னும் இடத்தில் வாக்குச் சாவடிக்கு அருகே நின்று வாக்கு கேட்ட விவகாரத்தில், திமுக மற்றும் பாமக கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் ஆரணியில் அதிமுக மற்றும் திமுக இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரின் பற்கள் உடைக்கப்பட்டது.
ஆம்பூரில் அமமுக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


