மக்களவைத் தேர்தலில் 71.87% வாக்குப்பதிவு; இடைத் தேர்தலில் 75.57% வாக்குப்பதிவு: சத்யபிரதா சாகு

தமிழகத்தில் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தமிழக தலைமைத்  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 71.87% வாக்குப்பதிவு; இடைத் தேர்தலில் 75.57% வாக்குப்பதிவு: சத்யபிரதா சாகு
Updated on
1 min read


சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தமிழக தலைமைத்  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 அதே சமயம், 18 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன.

2019 பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் சத்யபிரதா சாகு.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில்38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 71.87% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக தருமபுரியில் 85.49% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 56.41% வாக்குகள் பதிவாகின.

அதே சமயம், 18 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 75.57% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக சோளிங்கர் தொகுதியில் 82.26% வாக்குகளும், குறைந்தபட்சமாக பெரம்பூரில் 64.17% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். அந்த தேர்தலின் போது வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com