தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நான்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனுக்கள் பெறப்படாது: ஏன் தெரியுமா? 

தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனுக்கள் பெறப்படாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

News image
Updated On :25 ஏப்ரல் 2019, 3:24 pm

DIN

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனுக்கள் பெறப்படாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் (தனி) மற்றும் சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கும் வரும் திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அதேசமயம் மே 2 ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 27, 28-ல் வேட்பு மனுக்கள் பெறப்படாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாஹூ வியாழன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஏப்ரல் 27-ல் வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை, அத்துடன் 28-ம் தேதி ஞாயிறு விடுமுறை. இதன்  காரணமாக இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் 27 , 28 தேதிகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.