கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அங்கே வெள்ளப்பாதிப்பைத் தடுக்க காவிரி ஆற்றில் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. நாளை முதல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,கரையோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமான அளவிற்கு மேற்கொள்ளப்படவில்லை என செய்திகள் வருகின்றன. எனவே பழனிசாமி அரசு உடனடியாக இதில் கூடுதல் கவனம் செலுத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.