சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகாரம், ஜனநாயகம் இதை ரசிக்காது: கவிஞர் வைரமுத்து

ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகாரம், ஜனநாயகம் இதை ரசிக்காது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :22 ஆகஸ்ட் 2019, 7:32 am

DIN

ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகாரம், ஜனநாயகம் இதை ரசிக்காது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், தில்லியில் சிபிஐ அதிகாரிகளால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.  

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, அவர் தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் மூலம் உடனடியாக தடை பெறுவதற்கான முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், ப.சிதம்பரம் கைதாகியுள்ளார். 

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டரில்,
ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அதிகாரம்; ஜனநாயகம் இதை ரசிக்காது. வழக்கை அவர்  சட்டப்படி எதிர்கொண்டு விட்டு விடுதலையாவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.