மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவையில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை 

கோயம்புத்தூரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :29 ஆகஸ்ட் 2019, 4:37 am

கோயம்புத்தூரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கோவை, ராமேசுவரம் உள்ளிட்டப் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கோயம்புத்தூரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

உக்கடம், கோட்டைமேடு, பிலால் எஸ்டேட், ஜிஎம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியுடன் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி முகமது யாசின், சனபர் அலி, சதாம் உசேன், உமர் பாரூக், ஜமீசா முபின் ஆகிய 5 பேரின் வீடுகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.