தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என நடிகர் ரஜினிகாந்த், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினிகாந்தின் பெயரையோ, புகைப்படத்தையோ, ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கையில்,
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவில்லை. ஆகையால் யாரும் ரஜினிகாந்தின பெயர் மற்றும் புகைப்படம், ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர், ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயர், மன்றத்தின் கொடி, உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.