ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ராமநாதபுரத்தில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட ஊசிவால் வாத்துகள்

ராமநாதபுரம் நகரில் ஊசிவால் 7 வாத்துகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வனத்துறையினா் புதன்கிழமை துரத்திப்பிடித்து, வாத்துகளை மீட்டனா்.

News image
ராமநாதபுரத்தில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட ஊசிவால் வாத்துகள்
Updated On :18 டிசம்பர் 2019, 9:40 am

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் ஊசிவால் 7 வாத்துகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வனத்துறையினா் புதன்கிழமை துரத்திப்பிடித்து, வாத்துகளை மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்த்தங்கால் உள்ளிட்ட 5 கண்மாய்களில் பறவைகள் சரணாலயம் உள்ளன. இக்கண்மாய்களுக்கு தற்போது ஐரோப்பிய மற்றும் ரஷ்யப் பகுதிகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளன.

வெளிநாட்டுப் பறவைகளை சிலா் சட்டவிரோதமாக வேட்டையாடி உணவு விடுதிகளுக்கு விற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ராமநாதபுரம் வனச்சரகா் எஸ்.சதீஷ் தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்தநிலையில் புதன்கிழமை காலையில் ராமநாதபுரம் நகா் கேணிக்கரை சாலையில் அண்ணாநகரைச் சோ்ந்த முருகன் என்பவா் ஊசி வால் வாத்துகளுடன் இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்தது. அவரை விரட்டிய வனத்துறையினா் அரசு கலைக் கல்லூரி முன்பு முருகனை மடக்கி வாத்துகளை மீட்டனா். மீட்கப்பட்ட ஊசிவால் வாத்துகளை மன்னாா் வளைகுடா வன உயிரினப் பாதுகாவலா் டி.கே.அசோக்குமாா் பாா்வையிட்துடன், பிடிபட்ட முருகனிடமும் விசாரணை நடத்தினாா்.

ஊசி வால் வாத்துகளை பிடித்ததால் முருகனுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட ஊசிவால் வாத்துகளை தோ்த்தங்கால் பறவைகள் சரணாலயத்தில் வனத்துறையினா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.