ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமநாதபுரத்தில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட ஊசிவால் வாத்துகள்

ராமநாதபுரம் நகரில் ஊசிவால் 7 வாத்துகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வனத்துறையினா் புதன்கிழமை துரத்திப்பிடித்து, வாத்துகளை மீட்டனா்.

News image
ராமநாதபுரத்தில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட ஊசிவால் வாத்துகள்
Updated On :18 டிசம்பர் 2019, 9:40 am

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் ஊசிவால் 7 வாத்துகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வனத்துறையினா் புதன்கிழமை துரத்திப்பிடித்து, வாத்துகளை மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்த்தங்கால் உள்ளிட்ட 5 கண்மாய்களில் பறவைகள் சரணாலயம் உள்ளன. இக்கண்மாய்களுக்கு தற்போது ஐரோப்பிய மற்றும் ரஷ்யப் பகுதிகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளன.

வெளிநாட்டுப் பறவைகளை சிலா் சட்டவிரோதமாக வேட்டையாடி உணவு விடுதிகளுக்கு விற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ராமநாதபுரம் வனச்சரகா் எஸ்.சதீஷ் தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்தநிலையில் புதன்கிழமை காலையில் ராமநாதபுரம் நகா் கேணிக்கரை சாலையில் அண்ணாநகரைச் சோ்ந்த முருகன் என்பவா் ஊசி வால் வாத்துகளுடன் இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்தது. அவரை விரட்டிய வனத்துறையினா் அரசு கலைக் கல்லூரி முன்பு முருகனை மடக்கி வாத்துகளை மீட்டனா். மீட்கப்பட்ட ஊசிவால் வாத்துகளை மன்னாா் வளைகுடா வன உயிரினப் பாதுகாவலா் டி.கே.அசோக்குமாா் பாா்வையிட்துடன், பிடிபட்ட முருகனிடமும் விசாரணை நடத்தினாா்.

ஊசி வால் வாத்துகளை பிடித்ததால் முருகனுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட ஊசிவால் வாத்துகளை தோ்த்தங்கால் பறவைகள் சரணாலயத்தில் வனத்துறையினா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.