ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சாத்தூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது

சாத்தூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :27 டிசம்பர் 2019, 8:24 am

DIN

சாத்தூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி(20) மனநலம் பாதிக்கப்பட்டவர். வியாழக்கிழமை மாலை மகேஸ்வரி, அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த சமுத்திர ராஜன்(40) என்பவர் குடிபோதையில் மகேஸ்வரியை கடத்தி சென்று தனது வீட்டில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பார்த்து சமுத்திர ராஜனை தாக்கியுள்ளனர். பின்னர் ஏழாயிரம்பண்ணை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து சமுத்திர ராஜனை ஏழாயிரம்பண்ணை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சமுத்திர ராஜனை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை சமுத்திர ராஜனை போலீஸ் விடுத்ததாக தகவல் தெரிந்தது அடுத்து மகேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் ரெட்டியாபட்டி கிராமத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து தகவலறிந்த சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீஸார் விரைந்து வந்து மகேஸ்வரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சமுத்திரராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை காட்டிய பின்னரே மகேஸ்வரியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

வாக்குபதிவு மையத்தின் அருகே கிராமத்தினர் கூடியதால் இப்பகுதியில் அரை மணி நேரம் வாக்குப்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கிராமத்தினர் கலைந்து சென்றதும் வழக்கம்போல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.