ஈரோடு மாவட்டம் பவானி அருகே வாக்குச்சீட்டுகளை வாக்காளர்கள் ஒருவர் வீட்டிற்கு எடுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம் ஒரிச்சேரிபுதூர், சங்கரகவுண்டம்பாளையம் வாக்குச்சாவடிகளில் ஒரு நகைச்சுவை நிகழ்வு நடந்துள்ளது.
வாக்காளர்கள் இருவர் வாக்களித்துவிட்டு, வீட்டிற்குச் சென்ற நிலையில், அருகில் உள்ளவர்களிடம் வாக்குச்சீட்டை காட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்கள் இவ்வாறு செய்யக்கூடாது என்று கண்டித்து இருவரையும் சம்பந்தபட்ட வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச்சென்று வாக்குப்பெட்டியில் வாக்குச்சீட்டை போட வைத்துள்ளனர்.
வாக்காளர்கள் இருவரும் குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்த்தனர்.