மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும்?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும்? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, இதுகுறித்து டாஸ்மாக் தலைவர்

News image
Updated On :25 பிப்ரவரி 2019, 3:00 pm IST


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும்? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, இதுகுறித்து டாஸ்மாக் தலைவர் நேரில் ஆஜராகி விளமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சாவூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்திற்கு 100 மீட்டருக்குள் கோயிலோ, கல்வி நிறுவனங்களோ உள்ள இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி தஞ்சாவூர் பள்ளிக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின் முடிவில், தஞ்சாவூர் பள்ளிக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டனர். 

இந்த வழக்கில் தமிழக உள்துரை செயலாளர், டாஸ்மாக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரை எதிர்மனுதாரராக சேர்த்து விட்டதுடன், தமிழகத்தில் 2016 இல் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன? பின்னர் எத்தனை கடைகள், எத்தனை கட்டங்களாக மூடப்பட்டன, அதில் கிடைக்கப்பெற்ற வருமானங்கள் எவ்வளவு என்ற விவரகங்களை மாவட்ட வாரியாக அறிக்கை தரவேண்டும் என்றும், பின்னர் புதிய கடைகள் எத்தனை திறக்கப்பட உள்ளன? தமிழகத்தில் முழுவதுமாக டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும்? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், டாஸ்மாக் தலைவர் மார் 4 ஆம் தேதி நேரில் அஜராகி விளக்கமளிக்க வேண்டும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.