மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு, புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதர கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் திங்கள்கிழமை (பிப்.25) முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டன. இதில், கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட 90-க்கும் மேற் பட்டோர் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.மார்ச் 7-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களைக் கட்சித் தலைமையிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில்,கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால், அதற்காக செலுத்திய கட்டணத் தொகை திருப்பித் தரப்படும் எனவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்! மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை!

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! புதிய செயலி அறிமுகம்!
மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
