பிறகும் இருவருமே இந்த நிமிடம் வரை பதவியில் நீடித்துக் கொண்டிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும், இந்த இருவரையும் நியமனம் செய்த முதலமைச்சரும் அவர்களை அமைச்சர் பொறுப்பிலிருந்தும், உயர்கல்வித்துறை செயலாளர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்காமல் ஒன்றுமே நடக்காததைப்போல வேடிக்கை பார்ப்பதும், முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரை நியமித்த ஆளுநரும் பொறுமையுடன் அமைதி காப்பதும், அரசியல் சட்டம் , அதிமுக ஆட்சியில் பலவீனப்படுத்தப்பட்டு செயலிழக்கச் செய்யப் பட்டிருப்பதைக் காட்டுகிறது.
“திறமை மிக்க தலைமையின் கீழ் முதலமைச்சர் இந்த அரசை வழி நடத்தி வருகிறார்” என்று ஆளுநர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் அரசாங்கத்தின் செயற்கையான உரையை வாசித்து அதன் ஈரம் காய்வதற்குள் வெளிவந்துள்ள உயர்நீதிமன்ற உத்தரவும், விசாரணை நீதிமன்றத் தீர்ப்பும் அதிமுக ஆட்சி நிர்வாகத்தின் அருவருப்பான வெட்கக்கேடான அலங்கோலத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.