தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் 105 சித்தாமை முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு பொறிப்பகத்தில் வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரிய வகை கடல் சித்தாமைகள் டிசம்பர் முதல் மார்ச் வரையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். கடந்த ஆண்டு 25 ஆயிரம் ஆமைகள் முட்டைகளை விட்டு சென்றன. அவை மீட்கப்பட்டு ஆமை குஞ்சு பொறிப்பக காப்பத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டன. இதில் பொறிக்கப்பட்ட 95 சதவீதம் குஞ்சுகள் கடலில் விட்டப்பட்டன.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக ஆமைகள் டிசம்பர் மாதம் வரவில்லை. ஒரு மாதம் கடந்த நிலையில் முதல் முறையாக திங்கள்கிழமை அதிகாலையில் 105 முட்டைகளை ஆமைகள் இட்டுச் சென்றுள்ளன.
இதனையடுத்து வனச்சரக அலுவலர் சு. சதீஷ் தலைமையில் மன்னார் வளைகுடா கடல் பகுதி ஆமை முட்டை பாதுகாப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் 105 முட்டைகளையும் மீட்டு குஞ்சு பொறிப்பக காப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்தனர்.
இந்த ஆண்டு 20 ஆயிரம் முட்டைகள் கிடைக்கும். கரையோரம் ஆமைகள் முட்டையிட வரும் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரையில் கரை வலை மீனவர்கள் வலைகளை கரையோரம் போட வேண்டாம். இந்த முட்டைகள் 50 நாள் முதல் 70 நாள்களுக்குள் குஞ்சு பொறித்தவுடன் கடலில் விடப்படும் என வனச்சரக அலுவலர் சதீஷ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
பெண்ணிடம் தகராறு செய்ததாக 5 போ் கைது

வீடுதோறும் சோலார்!

நான்குனேரி - மூலைக்கரைப்பட்டி இடையே போதிய பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



