மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கல்வி செலவுக்காக மீன்பிடிக்க சென்றபோது சிறைபிடிக்கப்பட்ட 2 மாணவர்கள் :குடும்பத்தினர் கண்ணீர்

ராமேசுவரத்தில் இருந்து பள்ளி, கல்லூரி படிப்புக்கு பணம் சேர்க்க மீன்பிடிக்க சென்றபோது கைது செய்யப்பட்ட 2 மாணவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து மீட்க வேண்டும்

Updated On :15 ஜனவரி 2019, 2:42 am IST


ராமேசுவரத்தில் இருந்து பள்ளி, கல்லூரி படிப்புக்கு பணம் சேர்க்க மீன்பிடிக்க சென்றபோது கைது செய்யப்பட்ட 2 மாணவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து மீட்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனர். 
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் பெரும்பாலோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் சிலர் தங்களது குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைத்து மாற்று வேலைக்கு அனுப்பி வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி கல்லூரி வரை படிக்க வைக்கின்றனர். மீன்பிடி தொழிலில் போதிய வருவாய் இன்றி போவதால் விடுமுறை நாள்களில் மாணவர்கள் மீனவர்களாக மாறி மீன்பிடிக்க செல்கின்றனர். 
இந்நிலையில், சனிக்கிழமை மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 மீனவர்களில் துரைப்பாண்டி கீழக்கரை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர் ஆவார். இதே போன்று சாம்டேனியல் என்ற மாணவர் ப்ளஸ் 1 படித்து வருகிறார்.
தொடர் விடுமுறை என்பதால் குடும்ப சூழ்நிலை காரணமாக மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். குடும்ப சிரமத்திற்கு இடையே கல்லூரியில் படித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் விரைந்து இந்த இரு மாணவர்களையும் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
இந்நிலையில், இலங்கையில் உயிரிழந்த மீனவர் உடலை கொண்டு வர வேண்டும் என அவரது குடும்பத்தினர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.