வீடுகளில் தமிழிலேயே உரையாடுவோம் என தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று பாஜக முன்னாள் எம்பியும், தமிழுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வருபவருமான தருண் விஜய் பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தில்லி, கனாட் பிளேஸில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில் தருண் விஜய் திங்கள்கிழமை பொங்கல் திருநாளை கொண்டாடினார். இதைத்தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
பொங்கல் கொண்டாட்டம் தமிழ் மக்களுக்கு புதுவிதமான மகிழ்ச்சியைக் கொண்டு வரும். தமிழின் வளர்ச்சிக்கு இந்த ஆண்டு மிகுந்த உறுதுணையாக இருக்கும். உலகத்தை ஆளும் வகையில் தமிழின் மகிமை பரவட்டும். தமிழை பலப்படுத்துவது, இந்தியாவையும் அதன் ஒற்றுமையையும் பலப்படுத்துவதாகும்.
இந்திய மொழிகளில் தமிழுக்கென தனித்தன்மை உள்ளது. இதை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். பாரதியாரின் மரபும் இதுதான்.
தமிழ் சகோதர, சகோதரிகள் தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள், பெற்றோர் உள்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் தமிழிலேயே உரையாடுவோம் என்று இந்த பொங்கல் நன்னாள் முதல் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். நமது வீடுகளில் நாம் தமிழுக்கு மரியாதை தரவில்லை என்றால், மற்றவர்கள் எப்படி நமது தமிழ் மொழியின் பெருமைக்கு மரியாதை தர வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! - பெ. சண்முகம் கண்டனம்!

அப்பா... மகனே...
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


