மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழுவை நியமித்து முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:
மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்படுகிறது.
கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய 5 பேர் குழுவில் இடம்பெறுவர் என்று கூறியுள்ளனர். அதைப்போல மக்களவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவையும் முதல்வரும், துணைமுதல்வரும் அறிவித்துள்ளனர்.
அதன் விவரம்: அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செ.செம்மலை, பி.எச்.மனோஜ்பாண்டியன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ரவி பெர்னார்ட் ஆகிய 7 பேர் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பர் எனவும் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
