15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

மீண்டும் வாக்குச்சீட்டு முறையே திமுகவின் நிலைப்பாடு: கனிமொழி 

நாடு முழுவதும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

News image
Updated On :24 ஜனவரி 2019, 1:45 am IST


நாடு முழுவதும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பல மோசடிகள் தொடர்ந்து நடைபெறுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பல முன்னேறிய நாடுகள்கூட வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்துகின்றன. வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.
தமிழகத்தில் கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வராமல், அவர்களை அரசு கைதுசெய்து, அச்சுறுத்தி வருகிறது.
போராட்டத்தில் ஈடுபடுவோரை அச்சுறுத்தியே போராட்டத்தை அடக்கிவிடலாம் என நினைக்கும் அதிமுக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
முன்னதாக, தூத்துக்குடியில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அவர் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.