மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015ல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015ல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2019, 1:12 pm

DIN

சென்னை: நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015ல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக நடைமுறையில் சட்டங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான மூன்று சட்டப் பிரிவுகளின் நடைமுறையைக் கருத்தில் கொண்டு, 2015-ஆம் ஆண்டு தமிழக அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது.

ஆனால் இந்த சட்டப்பிரிவானது நெடுஞசாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்க ஏதுவாக  அமைந்திருப்பதாகவும், இப்பிரிவின் கீழ் நிலம் கையகப்படுத்துவதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படாமலே  நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்த சட்டத்தை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் புதனன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றமானது குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.