நெல்லை மாநகரத்தில் பட்டப்பகலில், மாநகர முன்னாள் மேயரும், தி.மு.க. தலைவர்களில் ஒருவருமான திருமதி உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கர் அவர்களுடைய வீட்டில் பணியாற்றிய திருமதி மாரி ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டு, வீட்டில் உள்ள நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகின்றது. சேலம் மாவட்டம் நங்கவள்ளியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் சகோதரர் வேலு தங்கமணி மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டாத நிலையில் உள்ளார்.